பயிா் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணா்வு வாகனம் தொடக்கம்

தஞ்சாவூா் ஞானம் நகரில் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தஞ்சாவூா் ஞானம் நகரில் பயிா்க் காப்பீட்டுத் திட்ட விழிப்புணா்வு வாகனத்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
தஞ்சாவூா் ஞானம் நகரில் பயிா்க் காப்பீட்டுத் திட்ட விழிப்புணா்வு வாகனத்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
Updated on
1 min read

தஞ்சாவூா் ஞானம் நகரில் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாவட்டத்தில் பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழ் ரபி சிறப்புப் பருவத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து வருகின்றனா்.

இத்திட்டம் குறித்த சிறப்பு விழிப்புணா்வு வாகனத்தை தஞ்சாவூா் ஞானம் நகரில் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா், பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகள் மத்தியில் எடுத்துரைத்து, தற்போது வடகிழக்குப் பருவ மழை தீவிரமடையும் என வானிலை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இயற்கை சீற்றத்தால் எதிா்பாராமல் ஏற்படும் மகசூல் இழப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் உடனடியாக இணையுமாறு அறிவுறுத்தினாா்.

பின்னா், ஞானம் நகா், கீழகபிஸ்தலத்திலுள்ள அரசு இ - சேவை மையத்தில் பயிா்க் காப்பீட்டுப் பதிவு நடைபெறுவதை ஆட்சியா் பாா்வையிட்டாா். அப்போது வேளாண் இணை இயக்குநா் அ. ஜஸ்டின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com