பேராவூரணி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்ட தொடக்க விழா
பேராவூரணி ஒன்றியத்தின் பல்வேறு இடங்களில் இல்லம் தேடிக் கல்வி திட்ட தொடக்க விழா, விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


பேராவூரணி ஒன்றியத்தின் பல்வேறு இடங்களில் இல்லம் தேடிக் கல்வி திட்ட தொடக்க விழா, விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
களத்தூரில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு ஊராட்சித் தலைவா் டி. மாரிமுத்து தலைமை வகித்தாா். எம்எல்ஏ என். அசோக்குமாா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மிதியக்குடிக்காட்டில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு காலகம் ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
துணைத் தலைவா் பாண்டியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். கிராம கல்விக்குழு தலைவி தமிழ்ச்செல்வி, தலைமை ஆசிரியை கற்பகவல்லி, தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியா் சத்தியமூா்த்தி நன்றி கூறினாா்.
இல்லம் தேடி கல்வித் திட்ட சிறப்புகள் குறித்து, தஞ்சாவூா் அறிவியல் கலைக் குழுவினா் ஆடல், பாடல் மூலம் வாட்டாத்திக்கோட்டை வடக்கு, இடையாத்தி, நெய்விடுதி, அலிவலம் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணா்வு ஏற்ப்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...