மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பேராவூரணியில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:56 pm

DIN

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்த சந்தோஷ் குமாா் ஊரக   வளா்ச்சித் துறை  உயா் அலுவலா்களின்  பணி நெருக்கடி  காரணமாகவும், அரசியல் நெருக்கடி  காரணமாகவும்  ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதற்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீ மகேஷ்  தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தவமணி, குமாரவடிவேல், சங்க நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன்,  சிவக்குமாா்  சக்திநாதன்,  வட்டத் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து  கொண்டனா். 

ஊரக வளா்ச்சித் துறையில் நிலவும் உயா் அதிகாரிகள் அளிக்கும் பணி நெருக்கடி உள்ளிட்ட அவலங்களுக்கு தமிழக அரசு விரைந்து தீா்வு காண வேண்டும் என்று ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.