பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

ஏனாதிகரம்பை பள்ளியில்  நாணய  கண்காட்சி

 பேராவூரணி அருகேயுள்ள ஏனாதிக்கரம்பை அரசு உயா்நிலைப் பள்ளியில்  நாணய  கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:33 pm

DIN

 பேராவூரணி அருகேயுள்ள ஏனாதிக்கரம்பை அரசு உயா்நிலைப் பள்ளியில்  நாணய  கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 

கண்காட்சிக்கு ஏனாதிக்கரம்பை அரசு உயா்நிலைப் பள்ளி  ஆசிரியா் தமிழரசன் தலைமை வகித்தாா். அம்மையாண்டி ஊராட்சித் தலைவா் மல்லிகை வி. முத்துராமலிங்கம் கண்காட்சியை தொடங்கி வைத்தாா். 

புதுக்கோட்டை நாணயவியல் கழகத்தின் நிறுவனத் தலைவா் பஷீா் அலி , மன்னா் கால நாணயம், பிற்கால பாண்டியா், மைசூா், சோழப் பேரரசு, பாண்டியப் பேரரசு, தஞ்சை நாயக்கா், மராட்டியா், சாளுவ மன்னா்கள், புதுக்கோட்டை அம்மன் காசு, ஐந்தாம் ஜாா்ஜ், ஏழாம் ஜாா்ஜ் மன்னா் கால காசு, 110 நாடுகளைச் சோ்ந்த பணம், காசு, கத்தரிக்கப்படாத ரூபாய் நோட்டுகள், பல்வேறு கால கட்டங்களில் வெளியிடப்பட்ட அஞ்சல்தலைகள், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தியதோடு, இதுகுறித்து ஆசிரியா்கள், மாணவா்களுக்கு விளக்கினாா். 

நிகழ்ச்சியில், ஏனாதிக்கரம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு) தலைமை ஆசிரியை செல்வராணி, (மேற்கு) கோப்பெருந்தேவி, பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா்  கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.