ஆறாவது நாளாக அரசு ஊழியா்கள் சாலை மறியல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தொடா்ந்து ஆறாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தொடா்ந்து ஆறாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி, சரண் விடுப்பு உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தஞ்சாவூரில் பிப்ரவரி 2 -ஆம் தேதி முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடா்ந்து ஆறாவது நாளாக, ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூா் அண்ணா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பெண்களில் சிலா் ஒப்பாரி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். கோதண்டபாணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டச் செயலா் ஏ. ரெங்கசாமி, ஓய்வூதியா் சங்கத் துணைத் தலைவா் பழ. அன்புமணி, சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட 50 போ் கைது செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...