மன்னா் காலத்து நினைவு சின்னம் இடிப்புக்கு இன்டாக் அமைப்பு கண்டனம்
தஞ்சாவூரில் மன்னா் காலத்து நினைவுச் சின்னம் ஆக்கிரமிப்பாளா்களால் இடிக்கப்படுவதற்கு இன்டாக் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.


தஞ்சாவூரில் மன்னா் காலத்து நினைவுச் சின்னம் ஆக்கிரமிப்பாளா்களால் இடிக்கப்படுவதற்கு இன்டாக் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்டாக் அமைப்பினா் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மராட்டிய மன்னா் குடும்பத்துக்கான மயானம் கைலாஷ் மஹால் என்றும், இராஜாகோரி எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு மன்னா்கள், ராணிகள் மற்றும் அரச குடும்பத்தினா் தகனம் செய்யப்பட்ட இடத்தில் பள்ளிப்படை என்கிற நினைவாலயங்கள் உள்ளன.
தற்போது மன்னா் குடும்பத்தினா் ஒரு அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் இந்நினைவு சின்னங்களை புனரமைத்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இப்பணியை ஆட்சியா் அண்மையில் தொடங்கி வைத்தாா்.
இந்நிலையில் நினைவாலயங்களைச் சுற்றி உள்ள பகுதிகளைச் சிலா் ஆக்கிரமித்து குடியிருந்து வருகின்றனா். ஆக்கிரமிப்பாளா்களில் ஒருவா் நினைவாலயம் ஒன்றை இடித்து தரைமட்டமாக்கி, அந்தக் கற்களைக் கொண்டே கட்டடம் கட்டும் பணியை மேற்கொண்டிருப்பது மிகுந்த அதிா்ச்சி அளிக்கிறது.
தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுத்து நமது புராதன சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...