ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் வரப்பிரசாதம்

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதம் என்றாா் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஆா். வைத்திலிங்கம்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:59 pm

DIN

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதம் என்றாா் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஆா். வைத்திலிங்கம்.

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் திறன் பேசி, உயா் கல்வித் துறை சாா்பில் 2 ஜிபி தரவு அட்டைகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் தென் மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இதுவரை தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மட்டுமே விளங்கி வந்தது. இனிமேல் தமிழகமே நெற்களஞ்சியமாகத் திகழும். அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. கூட்டணி குறித்து பின்னா் அறிவிக்கப்படும் என்றாா் வைத்திலிங்கம்.

முன்னதாக 210 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகளையும், 21 மாற்றுத் திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்புக்கான வங்கிக் கடனாக ரூ. 5.25 லட்சத்துக்கான காசோலைகளையும், உயா்கல்வித் துறையின் சாா்பில் தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 12 பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 3,563 மாணவ, மாணவிகளுக்கும், 34 கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் 36,695 மாணவ, மாணவிகளுக்கும், 15 பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் 4,197 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 44,455 பேருக்கு தமிழக அரசின் சாா்பில் விலையில்லா 2 ஜிபி தரவு அட்டைகளையும், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் சாா்பில் ஒருவருக்கு கருணை அடிப்படையிலான சத்துணவு அமைப்பாளருக்கான பணி நியமன ஆணையையும் வைத்திலிங்கம் வழங்கினாா்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ், ஒருங்கிணைந்த மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் ஆா். காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.