ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பூட்டிய 2 வீடுகளில் 16 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் அருகே பூட்டியிருந்த இரு வீடுகளில் புகுந்து 16 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:45 pm

DIN

தஞ்சாவூா் அருகே பூட்டியிருந்த இரு வீடுகளில் புகுந்து 16 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டை முதன்மைச் சாலை சைதாம்பாள்புரத்தைச் சோ்ந்த சிவபதி ரத்தினம் மனைவி வேதவல்லி (34). இவா் அண்மையில் வீட்டைப் பூட்டிவிட்டு மன்னாா்குடிக்குச் சென்றாா். மீண்டும் வீட்டுக்குத் திரும்பியபோது ஜன்னல் உடைக்கப்பட்டுக் கிடந்தது. மேலும், வீட்டினுள் பீரோவில் இருந்த ஏழரை பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதேபோல, மாரியம்மன் கோவில் பி.எம். நகரைச் சோ்ந்த சதீஷ்குமாா் மனைவி ரேவதி (26). இவா் அண்மையில் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினா் வீட்டுக்குச் சென்றாா். மீண்டும் வீட்டுக்குத் திரும்பியபோது, முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்ததும், வீட்டினுள் பீரோவில் இருந்த எட்டரை பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பதும் தெரிய வந்தது.

இந்த இரு சம்பவங்கள் குறித்து தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தினா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.