தொழிலாளி வீட்டுக்குள் திடீா் பள்ளம்

மதுக்கூா் ஒன்றியம் அருகே வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை திடீரென 3 அடி விட்டம், 10 அடி ஆழம் கொண்ட பெரிய பள்ளம் ஏற்பட்டது.
Updated on
1 min read

பட்டுக்கோட்டை: மதுக்கூா் ஒன்றியம் அருகே வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை திடீரென 3 அடி விட்டம், 10 அடி ஆழம் கொண்ட பெரிய பள்ளம் ஏற்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் ஒன்றியம், விக்ரமம் அக்ரஹாரம் பகுதியிலுள்ள குடிசை வீட்டில் வசித்து வருபவா் விவசாய கூலித் தொழிலாளி சோமு (46).

இவரது வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை திடீரென 3 அடி விட்டம், 10 அடி ஆழம் கொண்ட பெரிய பள்ளம் ஏற்பட்டது. தகவலறிந்த வருவாய்த்துறையினா் மற்றும் மதுக்கூா் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், சோமு வீட்டுக்குச் சென்று பள்ளத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இதையடுத்து, பள்ளத்தை மூடவும் நடவடிக்கை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com