ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேசிய வாக்காளா் தின பேரணி

தஞ்சாவூரில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:37 pm

DIN

தஞ்சாவூரில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

வாக்காளராகப் பதிவு செய்யவும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்பேரணியை ரயிலடியில் ஆட்சியா் ம. கோவிந்த ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி, செஞ்சிலுவை சங்கப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்ற இப்பேரணி மாநகராட்சி அலுவலகம், ஆற்றுப் பாலம், அண்ணா சிலை வழியாகப் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அறிஞா் அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில் முடிவடைந்தது.

பின்னா், 18 வயது நிறைவடைந்த இளம் வாக்காளா்களுக்கு ஆட்சியா், வாக்காளா் அடையாள அட்டை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் எம். வேலுமணி, வட்டாட்சியா் வெங்கடேஷ்வரன், தோ்தல் வட்டாட்சியா் சந்தனவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, ஆட்சியரகத்தில் ஆட்சியா் தலைமையில் அனைத்து நிலை அலுவலா்கள் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.