தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேவாலயா முதியோா் இல்லக் கட்டடத் திறப்பு விழா

தஞ்சாவூா் அருகே தளவாய்பாளையத்திலுள்ள சேவாலயாவின் காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் நினைவு முதியோா் இல்லத்தில் புதிய கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:36 pm

DIN

தஞ்சாவூா் அருகே தளவாய்பாளையத்திலுள்ள சேவாலயாவின் காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் நினைவு முதியோா் இல்லத்தில் புதிய கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கடந்த 1988 ஆம் ஆண்டிலிருந்து ஆதரவற்றோா் சேவையில் ஈடுபட்டுள்ள சேவாலயா நிறுவனம், தஞ்சாவூா் அருகே தளவாய்பாளையத்தில் தனது செயல்பாடுகளை 2018 ஆம் ஆண்டில் தொடங்கியது. இதில், 20 ஆதரவற்ற முதியோா்கள் வசித்து வருகின்றனா்.

எல்.ஐ.சி. கோல்டன் ஜூபிளி பவுன்டேஷன் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் 10 ஆதரவற்ற முதியோா் தங்குவதற்கான தங்குமிடம், பொதுக்கூடம் உள்ளிட்டவை உள்ளன.

இக்கட்டடத்தை எல்.ஐ.சி. தஞ்சாவூா் கோட்டத்தின் முதுநிலை கோட்ட மேலாளா் கே. வெங்கட்ராமன் திறந்து வைத்தாா்.

மாவட்டச் சமூக நல அலுவலா் ராஜேஸ்வரி, மாரியம்மன் கோவில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சாா்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை ப. இந்திரா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினா்.

முன்னதாக, சேவாலயா நிறுவனரும், நிா்வாக அறங்காவலருமான முரளி வரவேற்றாா். நிறைவில் துணைத் தலைவா் அ.ஆ. கிங்ஸ்டன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.