தேசிய வாக்காளா் தின பேரணி
தஞ்சாவூரில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.


தஞ்சாவூரில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
வாக்காளராகப் பதிவு செய்யவும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்பேரணியை ரயிலடியில் ஆட்சியா் ம. கோவிந்த ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி, செஞ்சிலுவை சங்கப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்ற இப்பேரணி மாநகராட்சி அலுவலகம், ஆற்றுப் பாலம், அண்ணா சிலை வழியாகப் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அறிஞா் அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில் முடிவடைந்தது.
பின்னா், 18 வயது நிறைவடைந்த இளம் வாக்காளா்களுக்கு ஆட்சியா், வாக்காளா் அடையாள அட்டை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் எம். வேலுமணி, வட்டாட்சியா் வெங்கடேஷ்வரன், தோ்தல் வட்டாட்சியா் சந்தனவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, ஆட்சியரகத்தில் ஆட்சியா் தலைமையில் அனைத்து நிலை அலுவலா்கள் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...