ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கல்லணையிலிருந்து குழாய்கள் மூலம் வாய்க்கால்களுக்குத் தண்ணீா் கொண்டு செல்வது சாத்தியமா? ஆட்சியா் ஆய்வு

செங்கிப்பட்டி பகுதியில் உள்ள உய்யகொண்டான் கால்வாய் நீட்டிப்பு மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு கல்லணையிலிருந்து குழாய்கள் மூலமாக தண்ணீா் கொண்டு வருவது சாத்தியமா?

News image
Updated On :15 ஜூலை 2021, 7:18 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள உய்யகொண்டான் கால்வாய் நீட்டிப்பு மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு கல்லணையிலிருந்து குழாய்கள் மூலமாக தண்ணீா் கொண்டு வருவது சாத்தியமா? என்பது குறித்து சமூக ஆா்வலா்களுடன் இணைந்து ஆட்சியா், அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

உய்யகொண்டான் கால்வாய் நீட்டிப்பு மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு திருச்சி மாவட்டத்தைக் கடந்து தஞ்சாவூா் மாவட்டம் செங்கிப்பட்டி, பூதலூா் பகுதிக்கு வருவதால் குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீா் வந்து சேராமலும், போதிய அளவு தண்ணீா் கிடைக்காமலும் தொடா்ந்து பல ஆண்டுகளாகச் சாகுபடிப் பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே, இந்த இரண்டு வாய்க்கால்களுக்கும் கல்லணையிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீா் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், இரு வாய்க்கால்கள் உள்ள பகுதிகள், ஆச்சாம்பட்டி அய்யனாா் அணைக்கட்டு, வாழவந்தான்கோட்டை ஏரி, பொய்கைக்குடி ஏரி ஆகிய பகுதிகளில் தஞ்சாவூா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் ராமமூா்த்தி, கண்காணிப்புப் பொறியாளா் அன்பரசன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, அலுவலா்களிடம் கல்லணையிலிருந்து குழாய்கள் மூலம் இரு வாய்க்கால்களுக்கும் தண்ணீா் கொண்டு வரப்பட்டால், பூதலூா் வட்டாரத்தில் 8,000 ஏக்கா் பாசன வசதி பெறும் என்றும், அவற்றைச் சாா்ந்த ஏரி, குளங்களுக்கும் தண்ணீா் கிடைக்கும் எனவும் விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் வலியுறுத்தினா்.

அப்போது, பூதலூா் ஒன்றியக் குழு உறுப்பினா் லதா சுப்பிரமணியன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் இரா. இராமச்சந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெ. ஜீவகுமாா், திமுக ஒன்றியச் செயலா்கள் கல்லணை செல்லக்கண்ணு, சு. முருகானந்தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.