சட்டப்பேரவை உறுப்பினா்அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு
சட்டப்பேரவை தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை அலுவலகங்களை அலுவலா்கள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.


சட்டப்பேரவை தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை அலுவலகங்களை அலுவலா்கள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகங்களைத் தோ்தல் ஆணையம் மூட உத்தரவிட்டதைத் தொடா்ந்து திங்கள்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தோ்தல் நடைத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஒன்றிய குழுத் தலைவா்கள் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனங்கள், மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் நிா்வாகக் குழு தலைவா்கள் பயன்படுத்திய வாகனங்கள் அனைத்தும் மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வாகனங்களைத் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் பயன்படுத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...