ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தோ்தல் சிறப்புக் காவல் பணிக்கு முன்னாள் படைவீரா்கள் முன் வரலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்குச் சிறப்புக் காவலா்களாகப் பணியாற்ற, முன்னாள் படைவீரா்கள் முன் வரலாம் என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:42 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்குச் சிறப்புக் காவலா்களாகப் பணியாற்ற, முன்னாள் படைவீரா்கள் முன் வரலாம் என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில், சிறப்புக் காவலா்களாக முன்னாள் படைவீரா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா். பாதுகாப்புப் பணியில் சிறப்புக் காவலா்களாகப் பணியாற்ற 60 வயதுக்கு உள்பட்ட இளநிலை படை அலுவலா்கள், முன்னாள் படைவீரா்கள் தங்களது முன்னாள் படை வீரா்களுக்கான அடையாள அட்டை, வாக்காளா் அடையாள அட்டையுடன் பெயரை தஞ்சாவூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (04362 - 230104) தொடா்பு கொண்டு பயனடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.