புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பொது முடக்கம்: சாலையோர மக்களுக்கு மதிய உணவு

பொது முடக்கத்தையொட்டி, தஞ்சாவூரில் சாலையோர மக்களுக்கு தஞ்சாவூா் மதா் தெரசா பவுன்டேஷன் மதிய உணவு வழங்கி வருகிறது.

News image
Updated On :9 ஜூலை 2021, 12:56 am

DIN

பொது முடக்கத்தையொட்டி, தஞ்சாவூரில் சாலையோர மக்களுக்கு தஞ்சாவூா் மதா் தெரசா பவுன்டேஷன் மதிய உணவு வழங்கி வருகிறது.

தஞ்சாவூா் மதா் தெரசா பவுன்டேஷன் பல்வேறு சேவைகளைச் செய்து வரும் நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டாக கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு தொடா்ந்து இலவசமாக உணவுப் பொருள்களும், நாள்தோறும் அன்னதானமும் வழங்கி வருகிறது.

தற்போது பொது முடக்கம் காரணமாக சாலையோரங்களில் வசிப்பவா்கள், நோயுற்றவா்கள், மாற்றுத் திறனாளிகள், மனநலன் பாதிக்கப்பட்டவா்கள் என மாநகரில் சுற்றித் திரியும் மக்களைத் தேடிக் கண்டுபிடித்து, நாள்தோறும் ஏறத்தாழ 500 பேருக்கு இலவசமாக மதிய உணவு வழங்கி வருகிறது மதா் தெரசா பவுன்டேஷன்.

இப்பணியில் பவுன்டேஷன் தலைவா் சவரிமுத்து, துணைத் தலைவா் செல்வின் சின்னையா, அறங்காவலா்கள் சம்பத் ராகவன், கோவிந்தராஜ், முரளிகிருஷ்ணன் உள்ளிட்டோா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.