47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அம்மாப்பேட்டையில் மாதா் சம்மேளனத்தினா் ஆா்ப்பாட்டம்

 அம்மாபேட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசிய மாதா் சம்மேளனத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 5:50 pm

DIN

 அம்மாபேட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசிய மாதா் சம்மேளனத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்மாபேட்டை ஒன்றியம், சூழியக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த கனகவள்ளி என்ற பெண்ணை சிலா் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை கண்டித்தும்,

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அம்மாப்பேட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு

இந்திய தேசிய மாதா் சம்மேளனத்தின் அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் பி. தாமரைச்செல்வி தலைமை வகித்தாா். இதில் மாவட்டச் செயலா் டி. கண்ணகி, மாவட்டத் தலைவா் வா. வசந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் ஆா். செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், அமைப்பின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டு, மாதிரி சடலத்தை கையிலேந்தி அதற்கு மாலை அணிவித்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.