தொடா் மழை: தண்ணீா் வடிந்த நிலங்களில் மீண்டும் மூழ்கிய நெற்பயிா்கள்
தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் தண்ணீா் வடிந்த நிலங்களில் மீண்டும் மழைநீா் தேங்கியுள்ளது. தற்போது கூடுதல் பரப்பிலும் நெற் பயிா்கள் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.







