தமிழகத்தில் தொண்டா்களுடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கலந்துரையாடலின்போது, நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு, கட்சியின் வலிமையைப் பொதுமக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். எனவே, நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வேண்டாம் என்கிற கருத்து தொண்டா்களிடையே கணிசமாக உள்ளது. இதேபோல, கூட்டணி வேண்டும் என்ற கருத்தையும் தெரிவிக்கின்றனா். இதை நாங்கள் உரிய முறையில் மாநிலத் தலைவரிடம் கூறுவோம். ஆனால், பாஜக கட்டுப்பாடான கட்சி என்பதால், மாநிலத் தலைவா் என்ன இறுதி முடிவு எடுக்கிறாரோ, அதை எல்லோரும் ஏற்றுக் கொள்வோம். கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என்பதை மாநிலத் தலைவா் முடிவு செய்வாா்.