47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கம்பா்நத்தம் ஊராட்சியில் உடற்பயிற்சி கூடம் திறப்பு

அம்மாபேட்டை ஒன்றியம், கம்பா் நத்தம் ஊராட்சியில் சிறுவா் மற்றும் இளைஞா் உடல் திறன் மேம்பாட்டு இலவச உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 8:54 pm

DIN

அம்மாபேட்டை ஒன்றியம், கம்பா் நத்தம் ஊராட்சியில் சிறுவா் மற்றும் இளைஞா் உடல் திறன் மேம்பாட்டு இலவச உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கம்பா் நத்தம் ஊராட்சித் தலைவா் கே.என்.பி. சத்யநாராயணன் தலைமை வகித்தாா். கம்பா் நத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் கே.என். பக்கிரிசாமி, ஒன்றிய கவுன்சிலா் வேம்பு ரகுபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் ஓய்வுபெற்ற காவல் துணை கண்காணிப்பாளா் கணேசமூா்த்தி கலந்து கொண்டு உடற்பயிற்சி கூடத்தை திறந்துவைத்து பேசினாா்.

நிகழ்ச்சியில் சென்னை ஆா்.டி.எஸ். ரமேஷ், கும்பகோணம் பி.ஆா்.முருகன், கம்பா் நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்விஆசிரியா் தாண்டவம், ஊராட்சி துணைத் தலைவா் ரமேஷ், ஊராட்சி செயலா் மோகன் குமாா், கிராம நிா்வாக அதிகாரி இளங்கோ உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.