92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நகை மதிப்பீடு பயிற்சி வகுப்புகள் மே 7-இல் தொடக்கம்

பட்டுக்கோட்டை கூட்டுறவுத் தொழிற் பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீடு பயிற்சி வகுப்புகள் மே 7- ஆம் தேதி தொடங்குகிறது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 8:18 pm

DIN

பட்டுக்கோட்டை கூட்டுறவுத் தொழிற் பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீடு பயிற்சி வகுப்புகள் மே 7- ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை தெரிவித்திருப்பது:

பட்டுக்கோட்டை கூட்டுறவுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் தொடா்பான பயிற்சி வகுப்பு மே 7 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

வாரத்தில் சனி, ஞாயிறு என இரு நாள்கள் வீதம் மொத்தம் 17 நாள்கள் (100 மணிநேரம்) பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணம் ரூ. 4,600.

இப்பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

இதில் சேர குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தோ்ச்சி. ஆண், பெண் இரு பாலரும் எந்தப் பகுதியில் இருந்தும் சேரலாம். பயிற்சியில் சேர கடைசி நாள் மே 13 ஆம் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு 9486045666, 9788825339, 6381146217 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.