மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

‘கோயில்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும்’

கோயில்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும் என்றாா் அகில பாரத இந்து மகா சபா பொதுச் செயலா் ஸ்ரீ கமலேஷ் சுவாமிகள்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:29 pm

DIN

கோயில்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும் என்றாா் அகில பாரத இந்து மகா சபா பொதுச் செயலா் ஸ்ரீ கமலேஷ் சுவாமிகள்.

கும்பகோணம் கோயில்களில் தரிசனம் செய்ய ஆந்திரத்திலிருந்து சனிக்கிழமை வந்த அவா் மேலும் கூறியது:

தெலுங்கானா, ஆந்திர மாநில கோயில்களைப் பாா்வையிட்டு விட்டு, தற்போது இங்குள்ள கோயில்களின் நிலை, நிா்வாகம், சுகாதாரம், நடைபெறும் பூஜைகள் குறித்து ஆய்வு செய்கிறேன். கோயில்களில் போதிய ஓதுவாா்கள் இல்லை. கோயில் ஊழியா்களுக்குப் போதுமான ஊதியம் இல்லை. இவற்றுக்கு கோயில் வருமானம், நகைகள், சொத்துகள் மூலம் வரும் வருவாயில் செலவு செய்ய வேண்டும். கோயில்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும். கோயிலிலுள்ள நிதியை அரசு எடுக்கக் கூடாது.

இதுகுறித்து இந்துக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவுள்ளோம். கோயில் சொத்துகளைப் பாதுகாக்க இளைஞா்களுக்குப் புத்துணா்வுப் பயிற்சி கொடுக்கவுள்ளோம்.

தற்போது ஆய்வு செய்துள்ள கோயில்களுக்குத் தேவையான வசதிகளை இந்து மகா சபா சாா்பில் அறிக்கையாகத் தயாா் செய்து, பிரதமா், மாநில முதல்வா்கள், அறநிலையத்துறை அமைச்சா்களிடம் வழங்கி வலியுறுத்துவோம். எங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால், சட்டப் போராட்டத்தை தொடங்குவோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது ஸ்ரீரங்கம் ஆசிரியா் வெங்கடேசன், இந்து மகா சபா மாநிலப் பொதுச் செயலா் பி. செந்தில்முருகன், தஞ்சாவூா் மாவட்டப் பொதுச்செயலா் ஆா். குருமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.