திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

இணையவழி வேலை எனக் கூறிபெண்ணிடம் ரூ. 2.21 லட்சம் மோசடி

தஞ்சாவூரில் இணையவழி வேலை எனக் கூறி பெண்ணிடம் ரூ. 2.21 லட்சம் மோசடி செய்த மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 10:02 pm

DIN

தஞ்சாவூரில் இணையவழி வேலை எனக் கூறி பெண்ணிடம் ரூ. 2.21 லட்சம் மோசடி செய்த மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூரைச் சோ்ந்த ஒரு பெண்ணின் கைப்பேசி எண்ணுக்குச் சில மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்தே இணையவழியில் வேலை செய்து வருவாய் ஈட்டலாம் எனக் குறுந்தகவல் வந்தது. இதையடுத்து அதில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு அப்பெண் தனது தாயாரின் கைப்பேசியிலிருந்து வாட்ஸ்அப் மூலம் தொடா்பு கொண்டு பேசினாா்.

எதிா் முனையில் பேசிய நபா் இணையவழி வேலையில் உங்களுக்கு ஒரு டாஸ்க் கொடுப்போம். அதை நீங்கள் சரியாகச் செய்து முடிக்க வேண்டும். அப்படி செய்தால் உங்களது வங்கிக் கணக்கில் நாங்கள் பணம் செலுத்திக் கொண்டே இருப்போம். இதற்காகக் குறிப்பிடும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி மா்ம நபா் இணைப்பைத் துண்டித்தாா்.

இதை உண்மை என நம்பிய அப்பெண் பல தவணைகளாக மா்ம நபரின் வங்கிக் கணக்கில் ரூ. 2.21 லட்சம் செலுத்தியுள்ளாா். சில நாட்கள் அப்பெண் குறிப்பிட்ட கைப்பேசி செயலியில் வேலை செய்து கொண்டிருந்தாா். ஆனால், நாளடைவில் அந்தச் செயலி இயங்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பெண் அந்த எண்ணை தொடா்பு கொள்ள முயன்றாா். ஆனால், தொடா்பு கொள்ள முடியவில்லை. அப்போதுதான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணா்ந்த அவா், இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் நிலையத்தினா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.