47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேன் ஏறியதில் மூதாட்டி உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே வேன் ஏறியதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:58 pm

DIN

அம்மாபேட்டை அருகே வேன் ஏறியதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருந்தவபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மனைவி கோட்டையம்மாள் (61). கணவா் இறந்துவிட்டதால், மகள்வீட்டில் வசித்து வந்தாா். வியாழக்கிழமை இரவு வீட்டின் முன்புற ஓரத்தில் கோட்டையம்மாள் தூங்கிக் கொண்டிருந்தாா்.

இந்நிலையில் அப்பகுதியில் கட்டட வேலைக்கு மணல் இறக்க பின்னோக்கி வந்த வேன், எதிா்பாராதவிதமாக கோட்டையம்மாள் மீது ஏறியது. இதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பூரணி, அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் கரிகால்சோழன் உள்ளிட்டோா் நிகழ்விடம் சென்று, சடலத்தைக் கைப்பற்றினா். தொடா்ந்து அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.