கஞ்சா கடத்தலை தடுத்துப் பிடித்த காவல் தனிப்படையினருக்கு டிஐஜி பாராட்டு
நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதைத் தடுத்து, 4 பேரைப் பிடித்த காவல் தனிப்படையினரை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஏ. கயல்விழி வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.


நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதைத் தடுத்து, 4 பேரைப் பிடித்த காவல் தனிப்படையினரை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஏ. கயல்விழி வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.
தஞ்சாவூா் சரகத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுப்பதற்காக, அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாகப்பட்டினத்தில் காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான 6 காவலா்கள் கொண்ட தனிப்படையினா் ஜனவரி 18- ஆம் தேதி இரு காா்களை சோதனையிட்டனா்.
அப்போது, இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 167 கிலோ கஞ்சா மூட்டைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரு காா்களையும் பறிமுதல் செய்து, வெளி மாநிலங்களைச் சோ்ந்த 4 போ் உள்பட 9 பேரைக் கைது செய்தனா்.
இந்த நடவடிக்கையில் சிறப்பாகப் பணியாற்றிய தனிப்படையினரை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஏ. கயல்விழி வெள்ளிக்கிழமை பாராட்டிச் சான்றிதழ் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...