விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆம்னி பேருந்து-கார் மோதிய விபத்தில் பெண் பலி

தஞ்சாவூரில் ஆம்னி பேருந்து-கார் மோதிய விபத்தில் பெண் பலியானர்.

News image
Updated On :6 ஜூலை 2022, 12:41 pm

தஞ்சாவூர்: சென்னையில் இருந்து தஞ்சை வந்த தனியார் சொகுசு பேருந்து, தஞ்சாவூர் கும்பகோணம் சாலை குருவாடி அருகே வந்து கொண்டிருக்கும் போது, திருச்சியில் இருந்து திருக்கடையூர் கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட சென்று கொண்டிருந்த சொகுசு கார் மீது மோதியதில் கார் நிலைத் தடுமாறி அருகே இருந்த பாலகட்டையின் மீது மோதி சாய்ந்து நின்றது. 

இதில்  கார் பலத்த சேதமடைந்ததோடு காரில் பயணம் செய்த பாக்கியலட்சுமி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும் காரில் 6 பேர் பயணம் செய்த நிலையில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். 

அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்ததையடுத்து, விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் படுகாயம் அடைந்தவர்களை தஞ்சை மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்துச் சென்றனர். 

மேலும் தகவல் அறிந்து வந்த தஞ்சை வட்ட காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குருவாடி பகுதி சாலை சரியில்லாத காரணத்தினாலும் வளைவுகள் அதிகம் உள்ள பகுதினாலும் அடிக்கடி விபத்து ஏற்படுவது வழக்கமாகவே உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.