தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஏப்.13-ல் தேரோட்டம்

தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரை பெருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூர் பெரியகோயிலில் புதன்கிழமை காலை சித்திரை பெருவிழாவுக்காக ஏற்றப்பட்ட கொடி.
தஞ்சாவூர் பெரியகோயிலில் புதன்கிழமை காலை சித்திரை பெருவிழாவுக்காக ஏற்றப்பட்ட கொடி.
Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரை பெருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, சந்திரசேகரர் பஞ்சமூர்த்திகளுடன் கோயிலுக்குள் புறப்பாடு நடைபெற்றது. மேள, தாளம் முழுங்க, ஓதுவார்கள் திருமறை மந்திரம் ஓத கொடியேற்றப்பட்டது. பின்னர், கொடி மரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. 

ஏப்ரல் 16-ஆம் தேதி வரை தொடரும் இவ்விழாவில் நாள்தோறும் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது. இதனிடையே ஏப்ரல் 7-ஆம் தேதி எண் திசை கொடியேற்றமும் 5-ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

ஏப்ரல் 16-ஆம் தேதி கொடி இறக்கப்பட்டு வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com