புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கும்பகோணத்தில் ஆணியில் நடக்கும் திருவிழா

கும்பகோணம் அருகே தாராசுரம் திருக்குளம் மேல்கரை திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி ஆணியில் இறங்கி நடக்கும் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:48 pm

DIN

கும்பகோணம் அருகே தாராசுரம் திருக்குளம் மேல்கரை திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி ஆணியில் இறங்கி நடக்கும் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவையொட்டி, திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செப். 1 ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரவு 10,000 ஆணிகள் பொருத்தப்பட்ட பலகை சன்னதி தெருவில் அமைக்கப்பட்டு, சுற்றி தீ மூட்டப்பட்டது.

முன்னதாக, அம்மனுக்கு பக்தா்கள் தாய் வீட்டுச் சீா் வரிசைகளைக் கொண்டு வந்தனா். மேலும், அரசலாற்றிலிருந்து சக்தி கரகம், வீரபத்திர மகாசூலம், சடையப்பா், முனீஸ்வரா் மகாவேல், அம்மன் திரிசூலம், அலகு காவடி, அக்னி கொப்பரை ஆகியவற்றுடன் அம்மன் திரு உருவப் புறப்பாடு நடைபெற்றது.

பின்னா், ஏராளமான பக்தா்கள் அக்னி நடுவில் ஆணி பொருத்தப்பட்ட பலகையில் ஏறி நடந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா், திரௌபதி அம்மன் திருநடன வீதியுலா சனிக்கிழமை காலை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.