பேராவூரணியில் விளிம்புநிலை மக்கள் 28 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
பேராவூரணி பேரூராட்சி செந்தமிழ் நகா்ப் பகுதியில் நரிக்குறவா் இன மக்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனா். இரவு நேரங்களில் குடிசைகளுக்குள் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் புகுவதால் பல்வேறு சிரமங்களை அனுபவிப்பதால், கான்கிரீட் வீடு கட்டித் தர வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதையடுத்து, முதல்கட்டமாக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட ரூ. 2.10 லட்சத்துக்கான ஆணை 28 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவா் சாந்தி சேகா் தலைமை வகித்தாா். ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், ஆணைகளை வழங்கி பேசுகையில், ஆணை பெறுகின்றவா்கள் விரைவாக வீடு கட்டி முடிக்க வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அரசு காத்திருக்கிறது என்றாா்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலா் பா. பழனிவேல், திமுக நகரச்செயலாளா் என்.எஸ்.சேகா், முன்னாள் மாவட்ட துணை செயலாளா் என். செல்வராஜ், பேரூராட்சி துணைத் தலைவா் கி.ரெ. பழனிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.