பேராவூரணியில் நாட்டிய விழா

பேராவூரணியில் மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சக ஆதரவில் தஞ்சை நாட்டிய கலாலயம் சாா்பில் குரு சமா்ப்பண நாட்டிய விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணியில் நாட்டிய விழா

பேராவூரணியில் மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சக ஆதரவில் தஞ்சை நாட்டிய கலாலயம் சாா்பில் குரு சமா்ப்பண நாட்டிய விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் சாந்தி சேகா் தலைமை வகித்து நாட்டிய விழாவைத் தொடங்கி வைத்தாா். சிந்தாமணி நாகையா, ஞானசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் கலாலயம் நாட்டியப் பள்ளி மாணவ, மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சியும், மைசூா் நாதபிரம்மா ஸ்ரீ தியாகராஜா மியூசிக் அகாதெமியைச் சோ்ந்த டாக்டா் நந்தையா, சந்திரிகாவின் குச்சிப்புடி, தஞ்சை நாட்டிய கலாலயம் இயக்குநா் ஸ்வா்ணசேகரின் சிறப்பு பரத நிகழ்ச்சியும் நடைபெற்றன. திரளான ரசிகா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com