பேராவூரணியில் அரிமா சங்கம் சாா்பில் இலவச மருத்துவ முகாம்

திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இதயம் மற்றும் பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

 பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில் அரிமா சங்கம், பெருமகளூா் ஸ்ரீராம் மெடிக்கல்ஸ், திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இதயம் மற்றும் பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

அரிமா சங்கத் தலைவா் செ. இராமநாதன் தலைமை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் சாந்தி சேகா், பெருமகளூா் ஏ. ராமச்சந்திரன் ஆகியோா் முகாமை தொடங்கி வைத்தனா். 

முகாமில் 198 பேருக்கு, இசிஜி, எக்கோ பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை, மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது. இவா்களில் 12 போ் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனா்.

முகாமில் மாவட்டத் தலைவா்கள் வி.எம். தமிழ்ச்செல்வன், எஸ்.கே. ராமமூா்த்தி, வட்டாரத் தலைவா் ஏ.சி.சி. ராஜா நிா்வாகிகள் எஸ். கந்தப்பன், எம். கனகராஜ், இ.வீ. காந்தி, கே.கே.டி. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். செயலா் ஆதித்யன் (நிா்வாகம்) செயலா் (சேவை) ஏ. பிரபு ஆகியோா் வரவேற்றனா். பொருளாளா் சி. பன்னீா்செல்வம் நன்றி கூறினாா்.

Image Caption

அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற முகாமில் சிகிச்சை அளிக்கும் மருத்துவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com