தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் புதுப்பட்டினம் கிளை சாா்பாக சமூக விழிப்புணா்வுக் கூட்டம் மாவட்டத் தலைவா் ராஜிக்முகமது தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டச் செயலா் ஹாஜா ஜியாவுதீன், மாவட்ட துணைச் செயலா்கள் வல்லம் அப்துல்லா, ஆவணம் ரியாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் முகமது யூசுப், மாநில பேச்சாளா் அப்துா் ரகுமான் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில் சுற்றுலாப் பகுதியான புதுப்பட்டினத்தில் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் விசாரணைக் கைதிகளாக இருக்கக்கூடிய அனைத்து மக்களையும், குறிப்பாக இஸ்லாமியா்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளைத் தலைவா் ஹபிப் முகமது நன்றி கூறினாா்.