பாபநாசம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் அமைப்புக் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அமைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அமைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில ஏஐடியுசி செயலாளா் ஆா்.தில்லைவனம் கலந்து கொண்டு பேசினாா். கூட்டத்தில் நிரந்தர தொழிலாளா்களுக்கு சம்பள பட்டியல், வருங்கால வைப்பு நிதி பட்டியல் விவரம் மாதந்தோறும் அளிக்க வேண்டும்.

தூய்மை பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள்,சோப்பு, கிருமி நாசினி மற்றும் சீருடை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com