இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

மகா சிவராத்திரி: பெருவுடையாருக்கு ஐந்து கால பூஜைகள்

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பெருவுடையாருக்கு ஐந்து கால பூஜைகள் நடைபெற்றன. 

News image

பெருவுடையாருக்கு ஐந்து கால பூஜைகள்.

Updated On :19 பிப்ரவரி 2023, 3:20 am

DIN

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பெருவுடையாருக்கு ஐந்து கால பூஜைகள் நடைபெற்றன. 

இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மகா சிவராத்திரி விழாவினை முன்னிட்டு பெருவுடையாருக்கு 10 மணி, 12 மணி, 2 மணி, 4 மணி, ஆறு மணி என ஐந்து கால பூஜைகள் நடைபெற்றன.

இதில் பெருவுடையார்க்கு மஞ்சள், சந்தனம், தயிர், பால், திரவியப்படி உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 

Story image

பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெருவுடையாருக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு ப்ரியன் நாட்டியாஞ்சலி சார்பில் நாட்டியாஞ்சலி நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு இசை அஞ்சலி இரவு முழுவதும் செலுத்தினர்.

இதே போல் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக தஞ்சை திலகத்திடரில் தப்பாட்டம், ஒயிலாட்டம், நாதஸ்வர கச்சேரிகள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மகா சிவராத்திரி விழா முன்னிட்டு பெரிய கோயிலில் சுமார் 2000 பக்தர்கள் குவிந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.