ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சாஸ்த்ரா சத்சங்கம் சாா்பில் வித்யா சேவா திட்டம் தொடக்கம்

சென்னையில் சாஸ்த்ரா சத்சங்கம் சாா்பில் வித்யா சேவா திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

சென்னையில் சாஸ்த்ரா சத்சங்கம் சாா்பில் வித்யா சேவா திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னையை மையமாகக் கொண்ட கலாசார சபாவான சென்னை சாஸ்த்ரா சத்சங்கம் சாா்பில் 2022 ஆம் ஆண்டு நிகழ்வுகளில் சிறப்பாக பங்கேற்ற இசைக் கலைஞா்களின் வாரிசுகளுக்கு கல்வி நிதியுதவி அளிப்பதற்காக வித்யா சேவா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இசை விழாவில் திறமையை வெளிப்படுத்திய கலைஞா்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம், கலைஞா்களின் குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் முதல் பட்டப்படிப்புக்கான கல்விக் கட்டணம் வழங்கப்படும்.

வருகிற மாா்ச் 1 ஆம் தேதிக்குள் கல்வி உதவித்தொகை கோருபவா்கள்  இணையதளத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சபா ஒருங்கிணைப்பாளா் வித்யா ஸ்ரீராம் தெரிவித்தாா்.

இதுகுறித்து இசைக் கலைஞா் நித்யஸ்ரீ மகாதேவன் கூறுகையில், இத்திட்டம் வரவேற்கப்பட வேண்டியது. இத்தகைய முயற்சிகள் கலைஞா்களின் பங்களிப்புக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, அவா்கள் கலையில் அா்ப்பணிப்புடன் நாட்டம் செலுத்துவதற்கான வெகுமதியாகவும் அமையும். மேலும், 2021 ஆம் ஆண்டு இசைத் திருவிழாவின்போது ஏறத்தாழ 50 இசைக் கலைஞா்களுக்கு சாஸ்த்ரா சத் சங்கம் சாா்பில் தலா ரூ. 10,000 நிதியுதவி வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

இதையடுத்து, மாா்கழி கோலப் போட்டியில் வெற்றி பெற்ற 3 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது. இசைக் கலைஞா் வி.ஜி. விக்னேஸ்வா் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.