தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டாஸ்மாக் இடமாற்ற விவகாரம் பாபநாசத்தில் மாா்க்சிஸ்ட் போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், கணபதி அக்ரஹாரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடையை அமைக்க கூடாது என வலியுறுத்தி

News image
Updated On :27 ஜனவரி 2023, 7:11 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், கணபதி அக்ரஹாரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடையை அமைக்க கூடாது என வலியுறுத்தி பாபநாசம் வட்டாட்சியரகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கணபதி அக்ரஹாரத்திலுள்ள டாஸ்மாக் கடை வேறு இடத்துக்கு இடம் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், குறிப்பிட்ட இடத்தில் கடை அமைவதால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும்,

இதை தடுத்து நிறுத்த கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் வி. முரளிதரன் தலைமையில் பாபநாசம் வட்டாட்சியரகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு என். சிவகுரு, மாதா் சங்க மாநில குழு ஆா். கலைச்செல்வி, மாவட்ட குழு பி.எம். காதா் உசேன் மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.