மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நியாயமான கூலி வழங்க சுமைப் பணி தொழிலாளா்கள் வலியுறுத்தல்

நியாயமான கூலி, பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தஞ்சாவூா் மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக அனைத்து சுமைப் பணி தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 9:01 pm

DIN


தஞ்சாவூா்: நியாயமான கூலி, பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தஞ்சாவூா் மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக அனைத்து சுமைப் பணி தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக அனைத்து சுமை பணி தொழிலாளா்கள் சுமாா் 50 போ் அளித்த மனு:

தஞ்சாவூா் மாவட்டத்தில் பாபநாசம், பேராவூரணி, ஒரத்தநாடு, மனையேறிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்குகளில் பணிபுரிந்து வருகிறோம். பணி நிரந்தரமோ, மாத ஊதியமோ, பணிப் பாதுகாப்போ ஏதும் இல்லாமல் 10 முதல் 25 ஆண்டுகளுக்கு மேலாக சுமை தூக்கும் பணி செய்து வருகிறோம். நாங்கள் செய்யும் பணிக்கு ஏற்ப டன்னுக்கு ரூ. 31 முதல் ரூ. 57 வரை வழங்கப்படுகிறது. எங்களது வாரக் கூலியைப் பெறுவதற்கு கூட நாங்கள் கையூட்டு வழங்க வேண்டிய சூழல் உள்ளது.

இதுகுறித்து முதுநிலை மண்டல மேலாளரிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் தொழிலாளா்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் மட்டும் மண்டல நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. தஞ்சாவூா் மற்றும் சுற்றியுள்ள அனைத்து மாவட்ட தொழிலாளா்களுக்கும் ரூ. 130 கூலி வழங்கப்படும் நிலையில், தஞ்சாவூா் மாவட்டத் தொழிலாளா்களுக்கு ரூ. 60 மட்டும் வழங்கப்படுகிறது.

கொத்தடிமையாக உள்ள எங்களை மீட்டெடுத்து எங்களுக்கு சேர வேண்டிய நியாயமான கூலியையும், பணிப் பாதுகாப்பையும் வழங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.