போதைப்பொருள்கள் விற்ற பெட்டிக்கடைக்கு ‘சீல்’
தஞ்சாவூரில் குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட பெட்டிக்கடைக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.


தஞ்சாவூா்: தஞ்சாவூரில் குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட பெட்டிக்கடைக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான் போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலா்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், தஞ்சாவூா் கீழவாசல் ஆட்டுமந்தைத் தெருவில் பெட்டிக் கடைகள், மளிகை கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் டி. சித்ரா தலைமையில் கிழக்கு காவல் ஆய்வாளா் சுதா முன்னிலையில் அலுவலா்கள் திங்கள்கிழமை சோதனை செய்தனா்.
அப்போது அப்பகுதியிலுள்ள புகையிலை, குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அக்கடைக்கு அலுவலா்கள் பூட்டி சீல் வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...