மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

போதைப்பொருள்கள் விற்ற பெட்டிக்கடைக்கு ‘சீல்’

தஞ்சாவூரில் குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட பெட்டிக்கடைக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 8:53 pm

DIN


தஞ்சாவூா்: தஞ்சாவூரில் குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட பெட்டிக்கடைக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான் போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலா்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் கீழவாசல் ஆட்டுமந்தைத் தெருவில் பெட்டிக் கடைகள், மளிகை கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் டி. சித்ரா தலைமையில் கிழக்கு காவல் ஆய்வாளா் சுதா முன்னிலையில் அலுவலா்கள் திங்கள்கிழமை சோதனை செய்தனா்.

அப்போது அப்பகுதியிலுள்ள புகையிலை, குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அக்கடைக்கு அலுவலா்கள் பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.