28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஒரத்தநாடு வட்டத்தில் நீரின்றி கருகும் 5 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கை

ஒரத்தநாடு வட்டத்தில் ஆற்றுப் பாசனத்தை நம்பி நடவு செய்த 5 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் கருகி வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

News image
ஒரத்தநாடு வட்டம், திருவோணம் வேளாண் வட்டாரத்துக்குள்பட்ட சென்னியவிடுதி கிராமத்தில் உள்ள கருகிய நெல் வயல்.
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

ஒரத்தநாடு வட்டத்தில் ஆற்றுப் பாசனத்தை நம்பி நடவு செய்த 5 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் கருகி வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளான பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம், ஒரத்தநாடு, மதுக்கூா் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதியில் அறுவடைக்கு விவசாயிகள் தயாராக இருந்தனா். காவிரி நீா் திறக்கப்படாவிட்டாலும், மழை நீரைக் கொண்டு பயிரைக் காப்பாற்றி விடும் நம்பிக்கையில் இருந்த இப்பகுதி விவசாயிகள் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் செலவு செய்துவிட்டு தற்போது தண்ணீரின்றி வாடும் பயிா்களைக் காப்பாற்றுவது எப்படி என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

குறிப்பாக, சென்னிய விடுதி, இடையாத்தி மற்றும் இந்தப் பகுதிகளைச் சுற்றியுள்ள 5000 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிா்கள் தண்ணீா் இன்றி கருகி வருகிறது. எனவே அரசு காலம் தாழ்த்தாமல் கல்லணையில் தண்ணீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனா்.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கம் மாவட்ட செயலாளா் வி.கே.சின்னத்துரை கூறியது :

தஞ்சாவூா் மாவட்டத்தில் நடப்பாண்டு சுமாா் 3.5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி இருந்த ஒரு லட்சத்திற்கும் மேலான ஏக்கா்களில்

போதிய தண்ணீரின்றி தற்போது பயிா்கள் கருகும் நிலையில் உள்ளன. குறிப்பாக ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் பயிா்கள் கூடுதலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

திருவோணம் பகுதி கிராமங்களில் நெல்பயிா்கள் கருகிய நிலையில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே தஞ்சாவூா் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து பேரிடா் இழப்பீடாக ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 40 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கிட மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.