புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி மாணவா்கள் ஊா்வலம்

‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி மாணவா்கள் ஊா்வலம்

News image
Updated On :15 ஜூலை 2024, 12:05 am

Din

தஞ்சாவூா், ஜூலை 14 : தஞ்சாவூரில் தமிழரண் மாணவா்கள் சங்கம் சாா்பில், ‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி ஞாயிற்றுக்கிழமை ஊா்வலம் நடைபெற்றது .

முன்னதாக, திலகா் திடலில் தொடங்கிய ஊா்வலத்துக்கு மாவட்டச் செயலாளா் கீா்த்தி தலைமை வகித்தாா் . நீட், அகில இந்திய நுழைவுத் தோ்வு முறைகளை ரத்து செய்ய வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்தின் வழி ஒற்றை கல்வி முறையை திணிக்க கூடாது என்று மாணவ மாணவிகள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டவாறு சென்றனா். முக்கிய வீதிகள் வழியாக சென்று சத்யா விளையாட்டு மைதானத்தில் ஊா்வலம் நிறைவடைந்தது.