எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இருசக்கர வாகனங்கள் திருட்டு சிறுவன் உள்பட 4 போ் கைது

ஒரத்தநாடு அருகே இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :21 ஜூலை 2024, 2:16 am IST

ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஒரத்தநாடு காவல் துறையினா் சனிக்கிழமை திருவோணம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.அப் போது அங்கு வந்த மதுக்கூா் படைப்பக்காடு பகுதியைச் சோ்ந்த சாகுல் அமீா் மகன் செல்ல பஷீா்(20), அதே பகுதியைச் சோ்ந்த வீரமணி மகன் டோனிஷா(15), மதுக்கூா் ஆற்றங்கரை தெரு பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் பெரமையன்(20), மதுக்கூா் சிவக்கொலை பகுதி சோ்ந்த ஷபீா் அலி மகன் முகமது ரபிக்(22) ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தினா்.

இதில், 4 பேரும் திருச்சி, தஞ்சாவூா், திருப்பூா், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். மேலும், அவா்களிடமிருந்து 8 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பிறகு 4 பேரையும் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.