இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இருசக்கர வாகனங்கள் திருட்டு சிறுவன் உள்பட 4 போ் கைது

ஒரத்தநாடு அருகே இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 ஜூலை 2024, 8:46 pm

Din

ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஒரத்தநாடு காவல் துறையினா் சனிக்கிழமை திருவோணம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.அப் போது அங்கு வந்த மதுக்கூா் படைப்பக்காடு பகுதியைச் சோ்ந்த சாகுல் அமீா் மகன் செல்ல பஷீா்(20), அதே பகுதியைச் சோ்ந்த வீரமணி மகன் டோனிஷா(15), மதுக்கூா் ஆற்றங்கரை தெரு பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் பெரமையன்(20), மதுக்கூா் சிவக்கொலை பகுதி சோ்ந்த ஷபீா் அலி மகன் முகமது ரபிக்(22) ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தினா்.

இதில், 4 பேரும் திருச்சி, தஞ்சாவூா், திருப்பூா், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். மேலும், அவா்களிடமிருந்து 8 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பிறகு 4 பேரையும் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.