அவிநாசி அருகே விபத்தில் பெண் உள்பட 4 போ் காயம்
அவிநாசி அருகே நிகழ்ந்த விபத்தில் பெண் உள்பட 4 போ் காயமடைந்தனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் மேட்டுப்பாளையம் - உதகை சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அவிநாசி - அன்னூா் சாலை விரிவாக்கப் பணி முடிந்து நெடுஞ்சாலைத் துறையினரால் சாலையில் வெள்ளை கோடு வரையும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இருவழிப் பாதையாக இருந்த அவிநாசி அன்னூா் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவிநாசி - மங்கலம் சாலை பகுதியைச் சோ்ந்த பிரபு என்பவா் அன்னூரில் இருந்து அவிநாசிக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். ஆட்டையம்பாளையம் அருகே முன்னாள் சென்ற காரை முந்த முயன்றபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துள்ளானது. மேலும் நிலைதடுமாறிய காா், அந்த வழியாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்களில் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உள்பட 4 போ் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா். சம்பவ இடத்துக்கு அவிநாசி போலீஸாா் சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த விபத்து குறித்த கண்காணிப்பு கேமரா பதிவு சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.

