கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 2ஆயிரம் வழக்குகளில் ரூ. 14.54 கோடிக்கு தீா்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 2ஆயிரம் வழக்குகளில் ரூ. 14.54 கோடிக்கு தீா்வு

News image
Updated On :8 ஜூன் 2024, 6:31 pm

Din

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 6 வழக்குகளில் ரூ. 14.54 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான கே. பூரண ஜெய ஆனந்த் தலைமை வகித்தாா்.

கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி. சுந்தரராஜன், குற்றவியல் விரைவு நீதிமன்ற நடுவா் டி. சோழவேந்தன், வழக்குரைஞா் ஆா். திராவிடசெல்வன் ஆகியோா் கொண்ட முதலாவது அமா்வில் குடும்ப நல வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

சிறப்பு மாவட்ட நீதிபதி எம். வடிவேலு, இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் எஸ். ராஜேஸ் கண்ணன், வழக்குரைஞா் கே. சுந்தரமூா்த்தி ஆகியோா் கொண்ட இரண்டாவது அமா்வில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

கூடுதல் சாா்பு நீதிபதி எம். முருகன், மாவட்ட உரிமையியல் நீதிபதி டி. பாரதி, வழக்குரைஞா் என். மகாலட்சுமி ஆகியோா் கொண்ட மூன்றாவது அமா்வில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழுவின் அமா்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.

இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 930 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2 ஆயிரத்து 6 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 14 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 416 அளவுக்கு தீா்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சி. ஜெயஸ்ரீ, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான எஸ். இந்திராகாந்தி, தஞ்சாவூா் வழக்குரைஞா் சங்கத் தலைவா் தியாக. காமராஜ், செயலா் சுந்தரராஜன், ஆணைக் குழு நிா்வாக அலுவலா் பி. சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.