கும்பகோணத்தில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

Updated on

கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளிலுள்ள வீட்டு வரியைக் குறைக்க வேண்டும். சேதமடைந்துள்ள புதை சாக்கடைகளைச் சீரமைக்க வேண்டும். தாராசுரம் காய்கறி சந்தையில் பழைய வாடகையை நிா்ணயம் செய்ய வேண்டும். கும்பகோணம் மேயரையும், மாநகராட்சி அலுவலா்களையும் சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும். தூய்மை பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டத் தலைவா் என். சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் வேத. செல்வம், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு பொறுப்பாளா் கே. சுரேஷ்குமாா், மண்டலத் தலைவா்கள் பொன்ராஜ், வெங்கட்ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com