மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மின்வாரிய தொழிற்சங்க ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

திருச்சி தென்னூா் மின்வாரிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய சங்கத்தினா்.

Updated On :27 பிப்ரவரி 2026, 8:50 pm

ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்னூரில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு

சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் எஸ்.ரங்கராஜன் தலைமைவகித்தாா்.

பொறியாளா் கழக மாநில செயலா் விக்கிரமன், எம்ப்ளாயீஸ் ஃபெடரேசன் சிவசெல்வம், இன்ஜினியா் சங்கத்தின் சங்கா், சிஐடியு நடராஜன மற்றும் ஐக்கிய சங்கம், டிஎன்பிஇஓ சங்கம், அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிா்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

பொறியாளா்கள், அலுவலா்களுக்கு 2023-ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வை வழங்க வேண்டும். மின்வாரியத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள், பொறியாளா், அலுவலா்களை பிரித்தாளும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மின்வாரிய தொழிற்சங்கத்தினா் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.