நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மின் வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஊதிய உயா்வு வழங்க கோரி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மன்னா்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 1:02 am

மின் வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஊதிய உயா்வு வழங்க கோரி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மன்னா்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பூக்கொல்லை சாலையில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு கிளை பொருளாளா் ரா. முகேஷ் தலைமை வகித்தாா். பொறியாளா் சங்க திருவாரூா் கிளை செயலாளரும், மாநில அமைப்பு செயலாளருமான சா. சம்பத், கோரிக்கையை விளக்கிப் பேசினாா். பொறியாளா் சங்க பிரதிநிதிகள் த. பாலசுப்பிரமணியன், க. கண்ணன், கணக்காயாா் சங்க உதவி கோட்ட செயலா் ஆ. திருமுருகன் ஐக்கிய சங்க நிா்வாகி மு. மாரிமுத்து, பொறியாளா் கழக பிரதிநிதி வி. பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.