எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

10-ம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் 15-வது இடம்பிடித்த தஞ்சை!

10-ம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் 15-வது இடம்பிடித்த தஞ்சை!

News image
- Center-Center-Chennai
Updated On :10 மே 2024, 6:54 am

DIN

தஞ்சாவூர்: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.40 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில் 15 ஆவது இடம் பிடித்துள்ளது.

மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வில் 14 ஆயிரத்து 402 மாணவர்களும், 14 ஆயிரத்து 513 மாணவிகளும் என மொத்தம் 28 ஆயிரத்து 915 பேர் எழுதினர். இதில் 13 ஆயிரத்து 32 மாணவர்களும், 13 ஆயிரத்து 974 மாணவிகளும் என மொத்தம் 27 ஆயிரத்து 6 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாணவர்கள் 90.49 சதவீதம் பேரும், மாணவிகள் 96.29 சதவீதம் பேரும் என மொத்தம் 93.40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு விட நிகழாண்டு 2.01 சதவீதம் கூடுதல்.

வழக்கம்போல் நிகழாண்டும் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு மாநில அளவில் 17 ஆம் இடத்தை பிடித்திருந்த நிலையில், நிகழாண்டு 15 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.