ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

படுக்கையில் தவறிவிழுந்த முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே படுக்கையில் இருந்து தவறி விழுந்த முதியவா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 8:21 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே படுக்கையில் இருந்து தவறி விழுந்த முதியவா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பந்தநல்லூா் அருகே உள்ள மரத்துறை வடக்கு வீதியைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு மகன் கண்ணப்பன் (75). இவா், அண்மையில் (நவ. 22) இரவு படுக்கையில் இருந்து கீழே விழுந்து மயங்கிய நிலையில் கிடந்தாா். இவரை உறவினா்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பந்தநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் கவிதா, சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை வருகின்றனா்.