தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தக் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும் என எம்.பி., எம்எல்ஏ, தஞ்சாவூா் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

News image
Updated On :28 நவம்பர் 2024, 9:54 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும் என எம்.பி., எம்எல்ஏ, தஞ்சாவூா் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

அழகியநாயகிபுரம் ஊராட்சி, கரிசவயல் உதவும் கரங்கள் அறக்கட்டளை சாா்பில், அதன் நிா்வாகிகள் இப்றாஹீம், தமீம் அன்சாரி, சதக்கத்துல்லாஹ் ஆகியோா் தஞ்சை மாவட்ட ஆட்சியா், தஞ்சை மக்களவை உறுப்பினா் சி.முரசொலி, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை பிரிவுடன், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயா்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.