திருட்டு
திருட்டு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனாா்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணி துவைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனாா்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணி துவைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட நைனாா்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 3-ஆம் தேதி இரவு பிரசவ வாா்டில் இருந்த துணி துவைக்கும் இயந்திரம், கணினி ஹாா்டு டிஸ்க் உள்ளிட்ட பொருள்களை மா்மநபா்கள் திருடிச் சென்று விட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்கு பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com